"மீண்டும் கிராமத்து வாழ்க்கை"

அரசமர பேருந்து நிறுத்தம்...
ஆலமர  ஊஞ்சல்...
கோரையாற்று   குளியல் ...
நடந்து சென்ற வயல்வெளி...
கூடி சிரித்த மதவு...
பாசி படிந்த குளம்...
பள்ளி சென்ற மிதிவண்டி...
அன்பான ஊர்மக்கள்...
கோயில் திருவிழா ...
இனிமையான தென்றல் காற்று ...
பறவை மற்றும் மரங்களின் ஓசை...
மழை நேரத்து  பலகாரம்...
கூட்டாக பார்த்த கிரிக்கெட் மேட்ச்...
ஆடு, மாடு மேய்த்த திடல்...
ஆற்று மணலில் விளையாண்ட விளையாட்டு...
இலந்தை,ஈச்ச பழத்தின் சுவை...
பனை மரத்து கள்ளு...
அம்மாவின் அருமையான உணவு...
தம்பியின் விளையாட்டான  சண்டை ...
இப்படி எத்தனையோ விலை கொடுத்து வாங்க முடியாத செல்வங்களை மீண்டும் அனுபவிக்க செல்கிறேன்.

Comments

Post a Comment