"கொல்லிமலை பயணத்தில்"


மேகங்கள்!!!

நான் ஒருபொழுதும் நினைக்கவில்லை உன்னுடன் பயணிக்க போகிறேன் என்று...

அருகில் வந்தாய்,
என்னை அருவியாக மாற்றினாய்.

கண்கள் இருந்தும் குருடனாக திரிகிறேன்.

இரவுக்கு ஒளியூட்டிய விளக்குகள் இன்று தனக்கே ஒளி கொடுக்க முடியவில்லை.

ஆடைகள் அணியாத மரங்களுக்கு,
இன்று வெண்ணாடை போர்த்தி விட்டாய்.


உதிர்ந்த பூங்கள் உயிர் பெற்று விட்டன, உன் தழுவலில்.

உன் அழகில் வீழ்ந்த பறவைகள், 
வெட்கத்தில் வெளிவர மறுக்கின்றன.

பெண்மையை வென்றது வெண்மையின் கர்வம், 
அனைத்தையும் மறைத்தது என் கண்களில் இருந்து.

உன் அழகை ரசித்து கொண்டே விடை பெருகிறேன்....

Comments

  1. Arumai expecting more like this

    ReplyDelete
  2. Azhagai rasithu varnitha ungaluku en vazthukkal

    ReplyDelete
  3. இயற்கையை ரசித்து வாழ தெறிந்தவனே சிறந்த மணிதன்!!!

    வாழ்த்துக்கள் பிரபு

    ReplyDelete
  4. இரவுக்கு ஒளியூட்டிய விளக்குகள் இன்று தனக்கே ஒளி கொடுக்க முடியவில்லை idupol anaiththu varigalum silirkiradhu .... Nee innum idupol niraiya yeZhudha naan aasai padukiren.... Nanbenda....

    ReplyDelete

Post a Comment