"ஊ ஒ ந நி பள்ளி பருவ நாட்கள் "


காலையில் தினமும் ஆற்றில் நண்பர்களுடன் சோப்பு இல்லாமல் அரை மணி நேரம் குளித்து விட்டு , பள்ளிக்கு நண்பர்களுடன் நடைபயணமாக வயல்கள், வாய்க்கால்கள் , ஒற்றை  பனைமர பாலம் மற்றும் வரப்புகள் வழியாக பள்ளியை சென்று அடையும் பொது அணிதிருந்த கால்சட்டை சிறிது ஈராமாக இருக்கும்.

துரைமுருகன் (எனது அண்ணன் ) கைகள்  எனது தோளில் பள்ளி செல்லும் வரை இருக்கும் .சில நேரம் அதனால் நான் வளர மாட்டேனோ என்று எண்ணியதும் உண்டு. ஏன்னென்றால் நான் தான் எனது வகுப்பில் இரண்டாவது உயரம் குறைந்த மாணவன் .

பள்ளிக்கு சிறிது தாமதமாக சென்று விட்டால் , பள்ளியை சுற்றி உள்ள குப்பைகளை பொறுக்க வேண்டும் .

பள்ளி : எங்களுக்கு மிகவும் பிடித்த இடம். ஏன்னென்றால் பாடங்கள் நடத்த படுகிறதோ இல்லையோ விளையாட அதிக நேரம் கிடைக்கும் மேலும்  பள்ளி  கட்டிடம்  பழைய கட்டிடம் என்பதால்  மழை பெய்தால் பள்ளிக்கு  விடுமுறை அழிக்கப்படும் . மழை காலத்தில் மழை பத்து நாட்களுக்கு மேல் கூட தொடர்ந்து பெய்ததும் உண்டு.
வல்லாங்கை (இடது கை ) ஆசிரியர் மறக்க முடியாத ஒருவர்,  வாய்ப்பாட்டு ஒன்றில் இருந்து பத்துவரை எழுத சொல்லி விட்டு தூங்கி விடுவர். எழுதி சென்று  காண்பித்தால் இன்னும் ஒருமுறை எழுது என்று தூக்கத்தை களைதர்க்காக, நாம்  கொண்டுவந்து  கொடுத்த குச்சியாலையே இரண்டு அடி அடித்து  அனுப்புவார். அதனாலையே யாரும் அவரிடம் செல்ல மாட்டோம். பதினொரு மணிக்கு ஆசிரியர்களுக்கு டீ (தேனீர்)  வாங்கி கொடுக்கொடுக்க வேண்டும். அதற்க்கு பல பேர் போட்டி போட்டதுவும் உண்டு  ஏன்னென்றால்  ஆசிரியர் அடிக்க மாட்டார் என்பதர்க்க.

பரிட்சை: பரீட்சைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே வினாத்தாளில்  உள்ள வினாக்கள் கரும்பலகையில் எழுதி போடப்படும். ஆனால் இதெல்லாம் முக்கியமான கேள்வி பரிட்சையில் கேட்டாலும் கேட்கலாம் என்பார் ஆசிரியர்.

சிறுவர் மலர் : எங்களுக்கு பிடித்த புத்தகம்.மதிய உணவுக்கு பிறகு அந்த புக்கை எட்டுமசாரிடம் (தலைமை ஆசிரியர் ) இருந்து பெற பெண்களுடன் போட்டி போட்டு பெற்று, எனது நண்பன் படிக்க கூட்டாக உட்கார்ந்து கேட்போம்.

Comments

Post a Comment