"பள்ளி முழு ஆண்டு விடுமுறை"

பள்ளி முழு  ஆண்டு  விடுமுறையில்  பாட்டி வீட்டில் கழித்த நாட்கள்...





ஒவ்வொரு ஆண்டும் பாட்டி வீட்டுக்கு விடுமுறைக்காக செல்வோம் 

ஏனென்றால், 

அன்பான குடும்பம் தாத்தா, பாட்டி, சித்தி மற்றும் மாமாவுடன்...

ஆங்காங்கே ஒரு வீடு, வேலிகள் இல்லாமல்,
மாமரத்தின் அடியிலும், முந்திரி மரத்தின் அருகிலும்.

ஒரு உயரமான மணல் மேடு, அதன் அடிவாரத்தில் திசை கணித்திர  முடியாத ஒரு ஆறு, கடல் மட்டத்திற்கு ஏற்ப திசையை மாற்றி கொள்ளும்.

இப்படி ஒரு அழகான சூழ்நிலையில் ஏற்பட்ட சில நினைவுகளின் தொகுப்பு ...


பத்து பேருக்கு சமைத்தாலும் பாட்டியின் சுவை மாறாத நண்டு குழம்பும், இறால் வறுவலும்...

மாலை பொழுதில் தாத்தாவின் செல்லம் கொஞ்சும் பேச்சும், கதையும்...

புளிய மரத்தின் அடியில் பாசத்துடன் சித்தி பகிர்ந்து கொடுத்த சோத்து உருண்டை...

ஒவ்வொரு நாளும் மாமா வாங்கி வரும் புது பட CD-க்காக காந்திருந்த இரவுகள்...

பக்கத்து வீட்டு வானொலி பாட்டுடன், அக்காவின் குழந்தை போன்ற இனிமையான பேச்சு...

வெள்ளை படுதாவில் உட்கார்ந்து கொண்டு விளையாண்ட பல்லாங்குழியும், பரமபதமும்...

சச்சின் சித்தப்பாவாகவும், கங்குலி மாமாவாகவும் நினைத்து கிரிக்கெட் பார்த்த நாட்கள்...

சைது அன்வர் 196 ரன்னும், கங்குலியின் கேட்சும்...

பாட்டுக்கு பாட்டு போட்டியில் மணி அண்ணன் பாடிய வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி...

காலையில் பாய்(முஸ்லிம்) வீட்டு ரஸ்க்கும், டீயும் ...

பக்கத்து வீட்டு குளிர் சாதன பெட்டியில் வைத்த மஞ்சள் நிற முந்திரி பழம்..

கூட்டாக சேர்ந்து ஆட்டுக்கு புல் பிடிங்கிய மாலை பொழுதுகள்..

இலுப்பை பூ மற்றும் பனம் பழத்தின் வாசத்துடன் குளியல்...

பாட்டிக்காக முந்திரி மரத்தில் விரகு உடைத்தது...

ஆற்றங்கறையில் பேய் என்று சொல்லிவிட்டு, மாமா பையனை தனியே விட்டு ஒடி வந்தது...

வயல் வழியாக பாய் வீட்டை கடந்து வாத்தியார் தாத்தா வீட்டுக்கு சென்ற பாதை...

வாத்தியார் தாத்தா வீட்டில் சத்து மாவை தின்று மூச்சு அடைத்த நாட்கள்...

வீட்டை சுற்றி ஒளிந்து பிடித்து விளையாண்ட நாட்கள்...

சூரிய ஒளி பட்ட மாங்காவின் கலரை பார்த்து ரசித்த நாட்கள்...

என் அம்மாவின் பேச்சை முதல் முதலாக ரெக்காட் செய்த மாமாவின் டேப் ரெக்காட்...

தாத்தாவின் பராமரிப்பில் வளர்ந்த பனை கிழங்கு, மரவல்லி கிழங்கு, கொமட்டி பழம்...

விடுமுறை முடிந்து செல்ல மனமில்லாமல் வரும் அழுகை...

இப்படி எத்தனையோ இனிமையான நினைவுகள், சில நேரங்களில் கண்ணீராக வந்து செல்கின்றன..



Comments

Post a Comment